Friday, September 14, 2012

கும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே



அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ 

உன்னை முதல் முறை கண்ட நொடியினில் 
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட 
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன் 
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

படம் : கும்கி (2012) 
இசை : இமான் 
பாடியவர் : ஹரிச்சரண் 
வரிகள் : யுகபாரதி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவர் பக்கம் - தேன்கிண்ணம் http://veeduthirumbal.blogspot.com/2013/02/10-dr.html

Last 25 songs posted in Thenkinnam