Monday, February 21, 2011

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது


ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது(2)
ஆடும் காத்துல கீத்துல
தாளம்போட்டு - ஆத்து மேட்டுல ஒரு பாட்டுகேக்குது
(ஆத்து மேட்டுல)

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டிக்கொண்டு ஆடவா

ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னிப்பொண்ண காணும் போது (ஆத்து மேட்டுல)

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் ஒன்ன சேர்க்கவா
ஊஹூம்மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

சொல்லச்சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன் ( ஆத்து மேட்டுல)



பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
திரைப்படம் : கிராமத்து அத்தியாயம்
இசை : இளையராஜா

3 Comments:

வல்லிசிம்ஹன் said...

80களில் வந்தது. இனிமையான பாட்டு. இதே போல ''பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ,
புன்னகையில் தெரியுது கண்ணா'' என்று ஒரு பாட்டு வரும் . எந்தப் படம்னு நினைவில்லை.:)
நன்றி முத்து.

ADHI VENKAT said...

இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

Anonymous said...

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ பாடல் நட்சத்திரம் என்ற படத்தில் வந்தது அதில் ஸ்ரீபிரியா நடிகையாகவே வருவார் அவரோடு கமலஹாசன் இணைந்து நடனமாடும் பாடல் இது

Last 25 songs posted in Thenkinnam