Tuesday, May 20, 2008

449. ஏனடி கண்ணே என்னாச்சு



ஏனடி கண்ணே என்னாச்சு
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வைத்தாலும்
மாங்கா மேலே கண்ணாச்சு

ஹேய் ஜெய் அனுமான் ஹேய் ஜெய் அனுமான்
உன் கருணையெல்லாம் இவருக்கு தெரிந்துவிடும்

ஹேய் சித்தப்பா
நான் பெத்தப்பா
நீ யாரப்பா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

இடுப்புல வலிச்சா சொல்லம்மா
எண்ணையை தேய்ப்பேன் நானம்மா
இருக்கிற பாரம் போதாதா
குறும்பு பேச்சு போகாதா
ஏனுங்க மாப்பிள்ளை வீண் பேச்சு
போதும் உங்க ஆராய்ச்சி
சின்ன சிறுசுங்க சிரிச்சாக்கா
பெருசுக்கு ஏன்யா பெரு மூச்சு
நீ துள்ளாதே ஆஹா
நீ சொல்லாதே ஆஹா
ஹேய் கிள்ளதே ஆஹா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

ஐயோ கொழுந்தி நிக்காதே
ஆம்பிள்ளை பிள்ளைய பெற்காதே
ஆம்பிள்ளையை பெத்தாலும்
இவன் கிட்ட மட்டும் கொடுக்காதே
பெருசுங்க பேச்சை மதிக்காதே
ராத்திரி என்னை மறக்காதே
பகலில் பாயை விரிக்காதே
எப்பவும் என்னை துரத்தாதே
என் பேரந்தான் ஆஹா
ஏய் வீரந்தான் ஆஹா
ஓர் சூரந்தான் ஆஹா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

படம்: ஜானகி ராமன்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, மனோ
வரிகள்: பழனி பாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam